டில்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மகாராஷ்டிராவில் 2 மணி நேர மௌன போராட்டத்தை மேற்கொண்டார். மாணவர்களுக்கு எதிராக காவல் துறை நடத்திய நடவடிக்கை மிகுந்த வேதனையளிப்பதாக கூறி, அவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என்றும் அவர் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
