Skip to content
Home » பெரம்பலூரில்…..வாரிசுகளுக்கு பணி ஆணை … அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்..

பெரம்பலூரில்…..வாரிசுகளுக்கு பணி ஆணை … அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்..

  • by Senthil

கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து, பணிகாலத்தில் இறந்த62 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று  வழங்கினார். மாவட்டஆட்சித்தலைவர் க.கற்பகம் தலைமையில்  பெரம்பலூர் பணிமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த ஆணைகளை வழங்கினார்கள்.  முன்னதாக பெரம்பலூர்பணிமனையில், பணியாளர்கள்  ஓய்வு எடுக்கும் வகையில்புதிய குளிர்சாதன வசதியுடன் கூடிய ஓய்வு அறையினை அமைச்சர் சா.சி.சிவசங்கர் திறந்து வைத்தார்.

பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சி.ராஜேந்திரன்,  வருவாய் கோட்டாட்சியர் ச.நிறைமதி, மேலாண் இயக்குநர் (தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், கும்பகோணம் கோட்டம்) ஆர்.மோகன், பொதுமேலாளர் (தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், திருச்சி மண்டலம்) எஸ்.சக்திவேல், முதுநிலை துணை மேலாளர் கோவிந்தராஜ், பொது மேலாளர் ( கூட்டாண்மைதொழில் நுட்பம்) முகமது நாசர், உள்ளிட்ட போக்குவரத்துக்கழக அலுவலர்கள், தொழிற்சங்கங்களின்பிரதிநிதிகள், தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!