Skip to content
Home » திருச்சியில் 200 பேருக்கு பணி நியமன ஆணை… மத்திய மந்திரி முருகன் வழங்கினார்

திருச்சியில் 200 பேருக்கு பணி நியமன ஆணை… மத்திய மந்திரி முருகன் வழங்கினார்

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கத்தில் மத்திய அரசு ரோஜ்கர் மேளா என்ற 6 -வது வேலை வாய்ப்பு விழா நடைபெற்றது. இதில் வங்கிகள், கஸ்டமஸ், ரயில்வே துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.  இந்த  நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மத்திய
ஒலிபரப்பு துறை இணை அமைச்சர்எல்.முருகன் கலந்துக்கொண்டு 200க்கும் மேற்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். விழாவில் அமைச்சர் முருகன் பேசியதாவது:

கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின விழாவில் ஒரு வருடத்தில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாத பிரதமர் மோடிஅறிவித்தார்.தற்போது இந்த 1வருடத்தில் மட்டும்4.20 லட்சம் பேருக்கு வழங்கி உள்ளார். மீதம் வேலை வாய்புகள் விரைவில் வழங்கப்படும்.

பாஜக ஆட்சிக்கு வரும் போது மெட்ரோ ரயில் திட்டமானது 5 நகரங்களில் இருந்தது. தற்போது 27 நகரங்களில் மெட்ரோ ரயில் செயல்படுகிறது.எழைகளின் அரசாக பாஜக செயல்படுகிறது.

குறிப்பாக அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தை நிறைவேற்றி வருகிறோம். வீட்டுக்கு வீடு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.மேலும் 80 கோடி பேருக்கு ரேஷன் கார்டு மூலம் அரிசி, பருப்பு வழங்கப்படுகிறது.

1 லட்சம் புதிய ஸ்டார்ட் அப்  நிறுவனங்கள்  துவங்கப்பட்டு இந்தியா 5 – வது பொருளாதார நாடாக உயர்ந்த உள்ளது.ராணுவ தளவாடம் இறக்குமதி செய்து வந்த நாம், தற்போது தொழிற்சாலை ஆரம்பித்து நாம் ஏற்றுமதி செய்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இன்று மட்டும் இந்திய முழுவதும்45 இடத்தில், 71,000 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது. பிரதமர் மோடி இதனை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.  திருச்சியில் நடந்த விழாவில் மத்திய அரசு அதிகாரிகள் ராமலிங்கம்,ரியாஸ்குல்கர் மற்றும்பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!