Skip to content
Home » மாற்றுதிறனாளிகள் பதிவு செய்ய அரியலூர் கலெக்டர் அறிவிப்பு..

மாற்றுதிறனாளிகள் பதிவு செய்ய அரியலூர் கலெக்டர் அறிவிப்பு..

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் உரிமைகள் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு பதிவு செப்டம்பர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் வரை இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 5 மாவட்டங்களில் சமூக தரவு பதிவுகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து நமது அரியலூர் மாவட்டத்தில் நவம்பர் 29ம் தேதி முதல் சமூக தரவு பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. இக்கணக்கெடுப்பில் தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்க களப்பணியார்களும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன களப்பணியாளர்களும் தகவல் சேகரிக்கும் பணியினை மேற்கொண்டு வருகிறார்கள். மாற்றுத்திறனாளிகள் விவரம் குறித்த கணக்கெடுப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ள செயலியில் தகவல்கள் பதிவு செய்யப்படும். எனவே அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் குடும்ப உறுப்பினர்களும் தாங்கள் தகவல்களை இக்கணக்கெடுப்பில் முழுமையாக தயக்கமின்றி வழங்க அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!