Skip to content
Home » அரியலூர் மாவட்ட போலீசார் சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு..

அரியலூர் மாவட்ட போலீசார் சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு..

  • by Senthil

அரியலூர் மாவட்ட காவல்துறையினர் சார்பாக, தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் வீடுகளையும், வாழ்வாதாரங்களையும் இழந்து தவிக்கும் பொது மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிடும் வகையில், ரூபாய் 5இலட்சம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் மாவட்ட காவல்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டு, அதனை தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொண்டு செல்வதற்காக, வெள்ள நிவாரண பொருட்கள் ஏற்றப்பட்ட காவல் வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா கொடியசைத்து அனுப்பி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா தலைமை தாங்கினார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அந்தோணி ஆரி, துணைக் காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன், வருவாய் அலுவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!