மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 31-ஆம் ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு இன்று, அரியலூர் மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வி.கைகாட்டியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, கழக கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் மேலும் கோடை காலத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திடும் வகையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக
தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். உடன் அரியலூர் மாவட்ட செயலாளர் க.இராமநாதன், மாநில விவசாய அணி செயலாளர் வாரணாசி கி.இராஜேந்திரன், அரியலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, அரியலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பி.சங்கர், கிளை கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.