Skip to content
Home » அரியலூர் அருகே மீரா மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா…

அரியலூர் அருகே மீரா மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா…

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூரில் உள்ள மீரா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல்வேறு துறை சார்ந்த மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் தமிழர் பாரம்பரிய சேலையணிந்து வந்து புத்தரிசி பொங்களிட்டு இயற்கையையும் விவசாயிகளையும் வணங்கி நன்றி தெரிவிதனர். நாட்டுப்புற கலை சார்ந்த கும்மிபாட்டு, கோலாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம் மற்றும் பல்வேறு கிராமிய போட்டிகளும் நடத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் மேஜர் முனைவர் விஜி

தலைமையில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் ஆர்வமுடன் கலந்துகொண்ட மாணவிகளுக்கு கல்லூரி செயலர் எம்.ஆர்.கமல்பாபு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார். முன்னதாக சங்கீதா வரவேற்றார் தவச்செல்வி நன்றி கூரினார். மேலும்
நிகழ்ச்சிக்கு தேவையான ஏற்பாடுகளை பேராசிரியர் உஷாராணி சுகுணா தலைமையில் பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் , சிறப்பாக செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!