Skip to content
Home » திருமணமான பெண்ணுடன் தகாத உறவு… தட்டிக்கேட்ட தந்தையை தாக்கிய போலீஸ்காரர்..

திருமணமான பெண்ணுடன் தகாத உறவு… தட்டிக்கேட்ட தந்தையை தாக்கிய போலீஸ்காரர்..

சென்னை வேப்பேரி நெடுஞ்சாலை பகுதியில் வசித்து வருபவர் நந்தகுமார்(54). இவர் மின்ட் தெருவில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மகள் கீர்த்திகா( 23). இவருக்கும் ராஜாவு என்பவருக்கும் திருமணமானது. இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆறு மாதங்களுக்கு முன்பு அவரை பிரிந்து தனது தந்தையுடன் கீர்த்திகா வசித்து வருகிறார்.

இந்நிலையில் கீர்த்திகாவிற்கும் புளியந்தோப்பு பட்டாளம் காவலர் குடியிருப்பில் வசிக்கும்‌ காவலர் நூர்தீன்(31) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் தகாத உறவாக மாறியது. மாதவரம் பால் பண்ணை காவல் நிலையத்தில் மோப்ப நாய் பிரிவில் பணியாற்றி வரும் காவலர் நூர்தீனுக்கு ஏற்கெனவே திருமணமாகி ராதா என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.

இந்த சூழ்நிலையில் நந்தகுமாருக்கு தனது மகள் கீர்த்திகாவுடன் காவலர் நூர்தீன் தகாத உறவில் இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து காவலர் நூர்தீனிடம் நந்தகுமார் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் காவலர் நூர்தீன், நந்தகுமாரை அடித்து தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதன் பேரில் வேப்பேரி போலீசார் காவலர் நூர்தீன் மீது காயப்படுத்துதல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட இரு பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தகாத உறவைத் தட்டிக்கேட்ட காதலியின் தந்தையை அடித்து காயம் ஏற்படுத்திய காவலரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!