Skip to content
Home » போதை பொருட்கள் புழக்கம்…. அரியலூரில் அதிமுக சார்பில் ஆர்பாட்டம்…

போதை பொருட்கள் புழக்கம்…. அரியலூரில் அதிமுக சார்பில் ஆர்பாட்டம்…

அரியலூர் அண்ணா சிலை அருகே அதிமுக அரியலூர் மாவட்ட மகளிர் மாணவர் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அரசு கொறடாவுமான தாமரை.எஸ். ராஜேந்திரன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். முன்னாள் எம்பி இளவரசன் முன்னாள் ஜெயங்கொண்டம் எம் எல் ஏ ராமஜெயலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. போதை

பொருட்களின் கேந்திரமாக தமிழகம் விளங்குவதால் வருங்கால தலைமுறைகளின் வாழ்க்கை சீரழிந்து போகிறது. போதைப்பிறப்பு கடத்தல் அதிகம் தமிழகத்தில் நடைபெறுவதால் இந்திய அளவில் தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. வருங்கால சந்ததியினர் போதை பொருட்களுக்கு அடிமையாகி வாழ்க்கையை இழக்கின்றனர். இதற்கு காரணமாக உள்ளவர்களை உடனடியாக கைது செய்து சிறைகள் அடைக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டது ஆர்ப்பாட்டத்தில் அரியலூர் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை பொறுப்பாளர்கள் மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!