Skip to content
Home » அரியலூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்…

அரியலூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்…

  • by Senthil

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் க.சொ.க பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில், அரியலூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாநில ஊரக /நகர்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மற்றும் மகளிர் திட்டம் இணைந்து நடத்திய, தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமிற்கு, அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.ரமண சரஸ்வதி தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முகாமில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சான்றுகள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் முருகண்ணன், வட்டாட்சியர் துரை, கே.கே.சி கல்வி நிறுவன தலைவர் கே.கே.சி.செந்தில்குமார், க.சொ.க பாலிடெக்னிக் நிர்வாக இயக்குநர் மரு.மாலதி கண்ணன்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகானந்தம், குணசேகரன் மற்றும் பல முன்னணி நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள், இளைஞர்கள் கலந்துகொண்டனர்.
இறுதியில் துணை திட்ட இயக்குநர் சிவகுமார் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!