Skip to content

அரியலூர் எஸ்பி அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் கூட்டம்

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ், உத்தரவின்பேரில், அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் R.விஜயராகவன் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது.
அதன்படி புதன்கிழமையான இன்று அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த 07

மனுதாரர்கள் தங்கள் குறைகளை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் R.விஜயராகவனிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர்.

பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் R.விஜயராகவன், உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!