தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி நிலையில் அரியலூர் மாவட்டத்தில் வெயிலில் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போக்குவரத்து காவல் துறையினர் வெயிலின் தாக்கத்தில் இருந்து மீள்வதற்காகவும், நல்ல முறையில் சோர்வின்றி பணியாற்றுவதற்காகவும் போக்குவரத்து காவல்துறையினருக்கு நீர்மோர், பழச்சாறு, இளநீர் வழங்குமாறு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவிட்டார்.
அதன்படி இன்று ஜெயங்கொண்டம் நகரில் ஜெயங்கொண்ட உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்
ராஜாசோமசுந்தரம் ஜெயங்கொண்டம் போக்குவரத்து காவல்துறையினருக்கு பழச்சாறு வழங்கினார்கள். ஜெயங்கொண்டம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சகீரா பானு உடன் இருந்தார்.
அரியலூர் நகரில் அரியலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ், போக்குவரத்து ஆய்வாளர் கார்த்திகேயன் வழிகாட்டுதலின்படி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் உலகநாதன் போக்குவரத்து காவலர்களுக்கு இளநீர் வழங்கினார். அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் நகர போக்குவரத்து பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு தினந்தோறும் 4 முறை லெமன் ஜீஸ், மோர், இளநீர் உள்ளிட்ட குளிர்பானங்கள் வெயில் காலம் 3 மாதங்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும். காவல்துறையினர் வெயிலின் தாக்கம் இன்றி நல்ல உடல் நலத்துடன் பணிபுரியும் நோக்கில் வழங்கப்பட உள்ளது.