Skip to content
Home » பெரம்பலூர் தொகுதி….. தொழிலதிபர் அருண் நேரு விருப்பமனு அளித்தார்

பெரம்பலூர் தொகுதி….. தொழிலதிபர் அருண் நேரு விருப்பமனு அளித்தார்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புகிற திமுகவினர் சென்னை அண்ணா அறிவாலய த்தில் விருப்பமனு பெற்றனர்.  ரூ.2 ஆயிரம் செலுத்தி  விருப்ப மனுவை பெற்றவர்கள் அதனை நிரப்பி, எந்த தொகுதியில் போட்டியிடப்போகிறோம் என்பதை  தெரிவிக்கும் வகையில் விருப்ப மனுவை அளிக்கும் நிகழ்ச்சி இன்று  தொடங்கியது.

சென்னை அண்ணா அறி்வாலயத்தில்  இன்று  அமைச்சர் கே. என். நேருவின் மகன் தொழிலதிபர்  அருண்நேரு விருப்ப மனு அளித்தார்.  பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக அவர் அமைப்பு செயலாளர்  ஆர்.எஸ். பாரதியிடம் மனுவை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில்   திருச்சி மேயர் அன்பழகன், திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ. மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தர பாண்டியன், பழனியாண்டி, ஸ்டாலின் குமார் கதிரவன், பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன், முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார், கே என் ரவிச்சந்திரன் உள்பட  திரளானோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!