அரியலூர் மாவட்டம்,முட்டுவாஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவர் கடந்த ஜனவரி மாதம் ஜெயங்கொண்டத்தில் உள்ள kvb atmயில் பணம் எடுக்க சென்ற போது அங்கிருந்த டிப் டாப் ஆசாமி பெரியவருக்கு உதவி செய்வது போல் நடித்து அவருடைய ஏடிஎம் கார்டை திருடி சென்றுள்ளார்.
பின்னர் பெரம்பலூரில் உள்ள ஒரு நகை கடைக்கு சென்று அங்கு 33 ஆயிரத்து நகைக்கு பணம் கட்டியுள்ளான்.
பின்னர் அதே பகுதியில் உள்ள ஒரு atm -யில் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துள்ளான். இது குறித்து குறுஞ் செய்தி வந்த நிலையில் பெரியவருக்கு சந்தேகம் வர கடந்த வாரம் ஸ்ரீ புரந்தானில் உள்ள எஸ்பிஐ வங்கியில் சென்று விசாரித்துள்ளார்.
அப்போது அவரது வங்கில் கணக்கில் இருந்த 63 ஆயிரம் எடுக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த பெரியவர் இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசாரிடம் புகார் கொடுத்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சுமார் 80 சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து தொடர்ந்து சென்றனர். பின்னர் அதில் உள்ள நபர் திருவண்ணாமலை மாவட்ட சேர்ந்த தேனிமலையை சேர்ந்தவர் என தெரிவந்தது. இந்த டிப் டாப் ஆசாமி பெயர் ராவணன் என்றும் தெரியவந்தது .
அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த இரண்டு ஏடிஎம் கார்டுகளை பறிமுதல் செய்து அவரிடம் இருந்து 50 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் இவர் மீது விருத்தாசலம், ஆண்டிமடம், பெரம்பலூர், திருச்சி, விழுப்புரம் , திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் இவர் மீது 11 வழக்கு நிலுவையில் உள்ளது என போல்சார் தகவல் கூறினர்.