ஓமன் கடற்பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்த MT EI Gaia என்ற இந்திய வணிக கப்பல் மீது திடீரென தாக்குதல் நடத்தப்பட்டது. 13 இந்திய மாலுமிகள் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், காணாமல் போன மேலும் ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. தாக்குதலை நடத்தியது யார்? என இதுவரை தெரியாத நிலையில், வணிக கப்பல்கள் மீதான தாக்குதலை ஏற்க முடியாது என இந்திய வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.
ஓமன் கடற்பகுதிக்கு அருகே இந்திய வணிக கப்பல் மீது தாக்குதல்- இந்தியா கண்டனம்
