Skip to content
Home » காய்கறிகள் பயிரிடுவதால் கிடைக்கும் லாபம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்..

காய்கறிகள் பயிரிடுவதால் கிடைக்கும் லாபம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்..

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூராட்சியை தன்னிறைவு பேரூராட்சியாக மாற்றுவதற்கு மலேசிய தொழிலதிபர் பிரகதீஸ்குமார் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறார்.
ஏற்கனவே தன் சொந்த நிதியிலிருந்து 13 கோடி ரூபாயை ஊரின் வளர்ச்சிக்காக அளிக்க முன்வந்த நிலையில் தற்பொழுது
ஒட்டன்சத்திரம்., தலைவாசலில் உள்ளது போல் பூலாம்பாடியில்  பெரிய அளவில் தினசரி காய்கறி மார்க்கெட் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்வதோடு,ஊரின் வளர்ச்சிக்கு வருவாயும் கிடைக்கும் என்பதால் பிரகதீஸ்குமார் அவரது செலவில் செய்து தர தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார் அதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று இரவு பூலாம்பாடியில் நடைபெற்றது

பூலாம்பாடியில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் காய்கறிகளை கோயம்பேட்டிற்கு அனுப்புவது மற்றும் மலேசியாவுக்கு நேரடியாக அனுப்புவது போன்ற திட்டம் இருப்பதாக கூறினார்

கூட்டத்தில் பெரம்பலூர் மற்றும் சேலம் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு காய்கறி சாகுபடி குறித்தும் காய்கறிகள் பயிரிடுவதால் கிடைக்கும் லாபம் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கினர்.

அதைத்தொடர்ந்து டத்தோ பிரகதீஸ்குமார் பேசும் போது காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு அரசு சலுகைகள் மானியங்கள் ஆகியவற் றை பெற்று தர தனது கம்பெனி செலவிலேயே பணியாளர் நியமிக்கப்படுவார்.விவசாயிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்துதரப்படும்.தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் உங்களுக்கு அவ்வப்போது ஆலோசனை வழங்குவர்.அனைவரும் ஒரே காய்கறிகளை பயிரிடாமல் வெவ்வேறு காய்கறிகளை பயிரிட்டால் லாபம் கிடைக்கும். வருகிற அக்டோபர் 25 ல் பூலாம்பாடியில் காய்கறி மார்க்கெட் திறக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.இந்த கூட்டத்தில் பூலாம்பாடி கடம்பூர் அரசடிக்காடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 500 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!