Skip to content
Home » புதுகை பள்ளியில்…..பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு முகாம்….போலீசார் நடத்தினர்

புதுகை பள்ளியில்…..பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு முகாம்….போலீசார் நடத்தினர்

  • by Senthil

புதுக்கோட்டைமாவட்ட காவல் கண்காணிப்பாளர்  வந்திதாபாண்டே  உத்தரவுப்படி
புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் அரசினர் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு (ACTU) காவல் ஆளினர்கள் மற்றும் கீரமங்கலம் காவல் ஆளினர்களால் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் *குழந்தை பாதுகாப்பு, போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள், சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடத்தினர் . முகாமில் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு
உதவி ஆய்வாளர் வைரம்,பள்ளிதலைமைஆசிரியர், ஆகியோர் பங்கேற்று
பெண்குழந்தைகளுக்கான விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துக் கூறினர். தங்களுக்க பிறரால்  ஆபத்து நேரிடலாம் என்று நினைத்தால் போலீசாரை  உடனே தொடர்பு கொள்ள வேண்டும். முன்பின் தெரியாதவர்களிடம் செல்போன் நம்பரை கொடுக்க கூடாது என்பது போன்ற விவரங்களை போலீசார் எடுத்துரைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!