Skip to content
Home » திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம்

திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம்

கோயில் நிலங்களில் நெல்லு மட்டுமே சாகுபடி செய்ய வேண்டும் என கூறும் வருவாய் நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் வருவாய் நீதிமன்ற அலுவலகம் முற்றுகை போராட்டம்

தமிழகம் முழுவதும் கோயிலுக்கு சொந்தமாக பல லட்சம்  ஏக்கர் ஏக்கநிலங்கள் உள்ளது. இந்த நிலங்களை விவசாயிகளுக்கு குத்தகைக்கு வழங்கப்படுகிறது இந்த நிலங்களை குத்தகைக்கு எடுக்கும் விவசாயிகள் நெல் பயிரிட்டு வருகின்றனர். தமிழக அரசின் விவசாயத்துறை நிலங்களில் மாற்றுப் பயிர் விவசாயத்தை ஊக்குவித்து வருகிறது. இதன் அடிப்படையில் கோயில் நிலங்களை குத்தகைக்கு எடுத்த விவசாயம் செய்யும் விவசாயிகள் மாற்று பயிர் செய்ய முற்படும் போது 13மாவட்டங்களுக்கு வருவாய் நீதிபதியாக செயல்படும் செல்வராஜ் என்பவர் கோவில் நிலங்களில் நெற்பயிருக்கு அடுத்தபடியாக மாற்று விவசாயம் மாற்று பயிர் செய்யக்கூடாது என தடுத்ததுடன் அப்படி மாற்று பயிரிடும் பட்சத்தில் குத்தகைகள் ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

இதனை கண்டித்து இன்று காலை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி  கலெக்டர் அலுவலகத்திற்கு பின்புறம் செயல்பட்டு வரும் வருவாய் நீதிபதி அலுவலகத்தை 150க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் முற்றுகையிட்டார்.

அங்கு நீதிபதி இல்லாததால் தொடர்ந்து அங்கு இருந்து பேரணியாக திருச்சி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் சென்று அங்கு ஆட்சியரிடம் மனு வழங்கினர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அய்யாகண்ணு, எங்களுக்கு தீர்வு கிடைக்காவிடில், சென்னையிலும் போராடுவோம் என்றார்.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!