Skip to content
Home » 330 இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என நம்புகிறோம்….. எடப்பாடி பேட்டி

330 இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என நம்புகிறோம்….. எடப்பாடி பேட்டி

டெல்லியில் 38 கட்சிகள் பங்கேற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டில்லியில் இன்று  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

9 ஆண்டுகள் மோடி சிறப்பான ஆட்சி அளித்துள்ளார். உலக அளவில் இந்தியாவின் பெருமையை உயர்த்தி இருக்கிறார். இன்றைய இளைஞர்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து செயல்படும் அரசாக மத்திய அரசு உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளும் அதற்கு துணை நிற்கின்றன. எனவே பாராளுமன்ற தேர்தலில் கிட்டத்தட்ட 330 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெறும என்று நம்புகிறோம். தற்போது கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாம் அப்படியே நீடிக்குமா என்று கேட்கிறீர்கள். அந்த கேள்விக்கே இடம் கிடையாது. சிறிய கட்சி, பெரிய கட்சி என்கிற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் உரிய மரியாதை தேசிய ஜனநாயக கூட்டணிகளில் வழங்கப்பட்டு இருக்கிறது.

கே: நேற்றைய கூட்டத்தில் அ.தி.மு.க.வுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்திலும் எதிரொலிக்குமா? அங்கு சிறு சிறு பிரச்சினைகள் கூட்டணியில் இருப்பதுபோல் தெரிகிறதே?

ப: உங்களது பார்வைக்கு அப்படி தெரியலாம். தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரையில் ஒருமித்த கருத்தோடுதான் அனைத்து கட்சிகளும் செயல்படுகின்றன. பெரிய கட்சி, சிறிய கட்சி என்ற பாகுபாடு இல்லை. இருந்தாலும் அ.தி.மு.க. தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. அதிக உறுப்பினர்களை கொண்டுள்ளது. நேற்றைய தேதி வரையில் 1 கோடியே 72 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க.வின் பெரிய வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!