உலக சாரண இயக்கத்தின் தந்தை பேடன் பவல் பிறந்தநாள் விழா(பிப். 22ம்தேதி) உலக சிந்தனை நாளாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் கடந்த 22ம் தேதி, முசிறி நேரு பூங்காவில் உலக சிந்தனை நாள் கொண்டாடப்பட்டது. முசிறி கல்வி மாவட்டத்தைச் சார்ந்த 50க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து சுமார் 300 சாரண, சாரணியர்கள் விழாவில் கலந்து கொண்டனர். காலையில் பேடன் பவுல் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் நேரு பூங்காவில் இருந்து முசிறி புதிய பஸ் நிலையம் வரை சாரண, சாரணியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. முசிறி காவல்துறையினர் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். அதன் பின்னர் சாரணர்கள் தங்கள் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் March Past, Physical display, Backwood cooking and folk dance ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், கலந்து கொண்ட அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட செயலர் ஜெயமூர்த்தி ,பயிற்சி ஆணையர் சலீம், அமைப்பு ஆணையர் திருமலை, பொருளாளர் ஷாஜகான் மற்றும் நாகராஜன், கண்ணன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.