Skip to content
Home » முக்கூடல்…….பாலகன் சரஸ்வதி மகளிர் கல்லூரி இருபெரும் விழா

முக்கூடல்…….பாலகன் சரஸ்வதி மகளிர் கல்லூரி இருபெரும் விழா

  • by Senthil

நெல்லை மாவட்டம்  முக்கூடல்  பாலகன் சரஸ்வதி, மகளிர்  கலை அறிவியல் கல்லூரியின்  முதலாமாண்டு  விளையாட்டு விழா வரும் 29ம் தேதி  காலை 10  மணிக்கு நடக்கிறது.  விழாவில்   நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக  உடற்கல்வியியல் துறை இயக்குனர் முனைவர் எஸ். ஆறுமுகம் சிறப்பு விருந்தி்னராக கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.  கல்லூரி நிறுவனர் மற்றும் சேர்மன் பாலகன் ஆறுமுகசாமி விழாவில் பங்கேற்று  வெற்றிபெறும் மாணவிகளுக்கு பரிசுகள்,

கேடயங்களை வழங்குகிறார். விழா ஏற்பாடுகளை  கல்லூரி முதல்வர் முனைவர் கிருஷ்ணவேணி  மற்றும் விழாக்குழுவினர் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

வரும் 30ம் தேதி காலை 10 மணிக்கு  பாலகன் சரவஸ்வதிமகளிர்  கலை அறிவியல் கல்லூரி முதலாமாண்டு கல்லூரி நாள்  விழா சிறப்பாக நடக்கிறது.  விழாவில்  முன்னாள் எம்.பியும்,  நாசசேரத் மர்காசியஸ் கல்லூரி முன்னாள் முதல்வருமான  முனைவர்  ஏடிகே ஜெயசீலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.  கல்லூரி நிறுவனர் மற்றும் சேர்மன்  பாலகன் ஆறுமுகசாமி விழாவில்   சிறப்புரையாற்றுகிறார்.  கல்லூரி முதல்வர் கிருஷ்ணவேணி நன்றி கூறுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!