Skip to content
Home » மரத்தின் நடுவில் குலை தள்ளிய வாழைத்தார்… பொதுமக்கள் வியப்பு…

மரத்தின் நடுவில் குலை தள்ளிய வாழைத்தார்… பொதுமக்கள் வியப்பு…

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் T.களத்தூரில் உள்ளது அரசு உயர்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் காய்கறி தோட்டம், பசுமையான மரங்கள் என இயற்கை எழில் கொஞ்சும் பசுமை பள்ளியாக விளங்குகிறது.
இதனிடையே பள்ளி வளாகத்தில் வாழை மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. அதில் 7 அடி உயரமுள்ள கரி வாழை வகையை சேர்ந்த ஒரு வாழை மரமானது 4 அடி உயரத்தில் மரத்தின் நடுப்பகுதியில் குலை தள்ளிய நிலையில்

வாழைப் பூவோடு வாழைத்தார் தற்போது வளர்ந்து வருகிறது.

வாழை மரத்தின் மேற்பகுதியில் தான் பொதுவாக வாழை குலை தள்ளிய நிலையில் காணப்படும். தற்போது
நடுவில் குலை தள்ளிய நிலையில் அதிசய வாழை மரத்தினை மாணவ – மாணவிகள்,
சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!