Skip to content
Home » தஞ்சை வங்கியில் ரூ.9 லட்சம் திருட்டு… ஊழியர் கைது

தஞ்சை வங்கியில் ரூ.9 லட்சம் திருட்டு… ஊழியர் கைது

  • by Senthil

தஞ்சை நகரின் மையப்பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கியில் பூதலூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகானந்தம் ( 31) என்பவர் தற்காலிக ஊழியராக வேலைபார்த்து வந்தார்.
அவர் வங்கியில் யாருக்கும் தெரியாமல் பணம் எண்ணும் எந்திரம் அருகே இருந்த ரூ.9 லட்சத்தை திருடினார். வங்கி பணம் இருப்பு குறைந்ததையடுத்து கேசியர் வங்கியின் கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்தார்.
. அதில் முருகானந்தம் பணம் திருடிய காட்சி பதிவாகியதை பார்த்து மற்ற ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே இது குறித்து தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது, அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகானந்தத்தை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!