Skip to content
Home » அதிகாரிகள் டார்ச்சர்.. பீகாரில் பெண் போலீஸ் தற்கொலை ..

அதிகாரிகள் டார்ச்சர்.. பீகாரில் பெண் போலீஸ் தற்கொலை ..

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அர்ச்சனா குமாரி (30) என்ற பெண் போலீஸ் பணி புரிந்து வந்தார். அவரது கணவர் சுமன் குமார் இவரும் போலீஸ்காரராக இருக்கிறார். சமீபத்தில் சுமன் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில் நேற்று அர்ச்சனா குமாரி தனது அலுவலகத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் கடிதம் ஒன்று எழுதி வைத்து உள்ளார். அதில் தன்னையும் தன் கணவரையும் மூத்த அதிகாரிகள் துன்புறுத்துவதாக தெரிவித்து உள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!