Skip to content
Home » நண்பர் பிறந்த நாள் விழா…..பைக் விபத்து… தஞ்சை வாலிபர் பலி….

நண்பர் பிறந்த நாள் விழா…..பைக் விபத்து… தஞ்சை வாலிபர் பலி….

தஞ்சை மானம்புசாவடியை சேர்ந்தரவிச்சந்திரன்  என்பவரது மகன் வெங்கடேஷ் (வயது 25). சம்பவத்தன்று இவர் அம்மாப்பேட்டையை சேர்ந்த நண்பரான செந்தில்குமாருடன் மேர்டார் சைக்கிளில் அய்யம்பேட்டையில் உள்ள நண்பர் ஒருவரது பிறந்தநாள் விழாவுக்கு சென்றார். பின்னர் பிறந்தநாள் நிகழ்ச்சியை முடித்து விட்டு மீண்டும் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் தஞ்சைதிரும்பிக்கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை செந்தில்குமார் ஓட்ட, வெங்கடேஷ் பின்னால் அமர்ந்திருந்தார்.
தஞ்சை அருகே மாரியம்மன்கோவில் புறவழிச்சாலை கடகடப்பை பகுதியில் வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்த நின்று கொண்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியது . இந்த விபத்தில் வெங்கடேஷ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். செந்தில்குமார் பலத்த காயமடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பலத்த காயமடைந்த செந்தில்குமாரை மீட்டு தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!