Skip to content
Home » ம.பி.யில்…… மலைவாழ் இளைஞா் மீது துப்பாக்கி சூடு நடத்திய பாஜக எம்.எல்.ஏ. மகன்

ம.பி.யில்…… மலைவாழ் இளைஞா் மீது துப்பாக்கி சூடு நடத்திய பாஜக எம்.எல்.ஏ. மகன்

மத்தியபிரதேச மாநிலம் சிங்குர்லி தொகுதி பாஜக எம்.எல்.ஏ. ராம்லாலு. இவரது மகன் விவேகானந்தன் (வயது 40).  கடந்த வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் சாலையில் மலைவாழ் மக்களிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில் விவேகானந்தன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட  மலைவாழ் இனத்தை சேர்ந்த நபரை சுட்டார்.  இந்த துப்பாக்கிச்சூட்டில் சூரியகுமார் என்பவரின் வலது கையில் குண்டு பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த சூரியகுமாரை மீட்ட அக்கம்பக்கத்த்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, வனத்துறை காவலர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கில் விவேகானந்தன் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!