அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஆணைக்கிணங்கவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஆணைக்கிணங்கவும் வரும் ஏப்ரல் 15 ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்துவது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் இன்று காலை 10:30 மணி அளவில் சென்னை ராயப்பேட்டை எம்.எஸ் மஹாலில் நடைபெற்றது. இதில் மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தின் சர்க்கிள் தலைவர்கள்,வட்டத் தலைவர்கள் மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், காங்கிரஸ் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
நாளை பிரதமர் மோடி சென்னைக்கு வரும் வேளையில் இக்கூட்டம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக அமைந்தது. ராகுல் காந்தி மீதான நடவடிக்கையை கடுமையாக எதிர்த்துப்போராட வேண்டியது நம் தலையாயக்கடமை.அவ்வகையில் நாளை சென்னை வருகை தரும் மோடிக்கு எதிராக கருப்புக் கொடியேந்தி போராட்டம் நடத்துவது என இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தகவலை மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவ.ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.