Skip to content
Home » பூம்புகார் கடலில் குளித்த வியாபாரி பலி… நண்பர் மாயம்

பூம்புகார் கடலில் குளித்த வியாபாரி பலி… நண்பர் மாயம்

மயிலாடுதுறை பர்மா காலனி மற்றும் கொத்த தெரு பகுதியை சேர்ந்தவர்கள் பாலமுருகன் (31), வெளிநாடு சென்று திரும்பி வந்துள்ளார், அரவிந்தன்(29). பழைய இரும்பு கடை  நடத்தி வந்தார். இவர்கள் இருவரும் நேற்று விடுமுறையை கொண்டாடுவதற்காக நண்பர்களுடன் பூம்புகார் கடற்கரைக்கு சென்றுள்ளனர் அங்கு 10க்கும் மேற்பட்டோர் கடலில் குளித்த போது ராட்சச அலையில் சிக்கிக்கொண்டனர்.

அனைவரும் கரையேறிய நிலையில் பாலமுருகன், அரவிந்தன் ஆகிய இருவரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து அவர்களால் நீந்தி கரை திரும்ப முடியாத நிலையில் கடலில் மூழ்கி இருவரும் மாயமாகினர். இதனை அறிந்த அவர்களது நண்பர்கள் அளித்த தகவலின் பேரில் பூம்புகார் போலீசார், மீனவர்கள் உதவியுடன் இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். கண்ணகி சிலை எதிரே அரவிந்தன் உடல் கரை ஒதுங்கியது. பாலமுருகனும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.  பாலமுருகன் உடலை தேடும்படியில் போலீசார் ஈடுபட்டுள்ளதுடன், இதுகுறித்து பூம்புகார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்,இச்சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!