திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த அய்யம்பாளையம் பாரதிநகரை சேர்ந்தவர் அண்ணாவி.இவரது மகன் மதிவாணன்(34). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து திருச்சியில் உள்ள தனியார் பால் கம்பெனிக்கு லோடு ஏற்றும் பணிகளை செய்து வந்தார்.
பால் லோடு ஏற்றுவதற்காக அய்யம்பாளையத்தில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற தனியார் பேருந்து கோட்டூர் அருகே ஆட்டோ மீது மோதியது.
இதில் ஆ ட்டோ டிரைவர் மதிவாணன்உடல் நசுங்கினார். இடிபாடுகளில் சிக்கிய அவரை மீட்டு முசிறி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்க மதிவாணன் இறந்தார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த வாத்தலை போலீசார் பேருந்து ஓட்டுனர் எம்.புதுப்பட்டி ராஜாவிடம்(45) விபத்து குறித்து விசாரணைநடத்தினர்.