ஊதிய உயர்வு,பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய பணப் பலன்களை வழங்குதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை அரசு ஏற்க மறுத்ததை அடுத்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் 2ம் நாளாக இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்டிைரைக்கில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கத்தினர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலை முன் இன்று சுமார் 200க்கும் அதிகமான தொழிலாளர்கள் சாலை மரியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் , சாலை மறியலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதில் தொழிற்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், பலர் கலந்து கொண்டு கைதாகினர். இதுபோல பல்வேறு இடங்களிலும் மறியல் நடந்தது.