நீட் தேர்வு மற்றும் EWS இட ஒதுக்கீட்டிற்கு எதிராக திராவிடர் கழகம் திட்டமிட்ட இருசக்கர வாகனப் பேரணியை முடக்கியது குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமி நாராயணன் கேள்வி எழுப்பியுள்ளார். “பேச்சுரிமை போல் போராடுவதும் அடிப்படை உரிமை; பாதுகாப்பு காரணங்களைக் கூறி மறுத்தால் ஹெலிகாப்டரிலா சென்று போராட முடியும்?” என குறிப்பிட்ட அவர், குடிமக்களின் உரிமைகளை அரசு நசுக்கக் கூடாது எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
