பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக அருண் நேரு போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வாக்காளர்களை சந்தித்து உதயசூரியனுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். அவர் செல்லும் இடங்கள் எல்லாம் மக்கள் அமோக ஆதரவு அளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் இருந்த வேட்பாளர் கே. என். அருண் நேருவை, வி.களத்தூர் ஜமாத் நிர்வாகிகள் சந்தித்து தங்களது ஆதரவைத் திமுகவுக்கு தெரிவித்தனர். அருண் நேரு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர். சிறுபான்மையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றி வரும் திமுகவுக்கு இஸ்லாமியர்களின் ஆதரவு எப்போதும் உண்டு.
அருண் நேரு வெற்றிக்காக அயராத உழைப்போம் என்றும் ஜமாத் நிர்வாகிகள் உறுதி அளித்தனர். அப்போது பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், மாவட்ட துணைச் செயலாளர் நூருல்ஹிதா இஸ்மாயில், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் டி.ஆர்.சிவங்கர், அப்.அப்துல்கரீம் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.