அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாளை தேர்தல் பிரசாரம் தொடங்குகிறார். திருச்சி வண்ணாங்கோவிலில் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் அதிமுக மற்றும் தேமுதி்க உள்ளிட்ட கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 40 பேரையும் கூட்டத்தில் அறிமுகம் செய்து எடப்பாடி பிரசாரம் செய்கிறார். கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள், அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்கிறார்கள். இதற்கான பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.