Skip to content
Home » காவிரி விவகாரம்….. பதில் கூற ரஜினி மறுப்பு

காவிரி விவகாரம்….. பதில் கூற ரஜினி மறுப்பு

  • by Senthil

சூப்பர் ஸ்டார்  ரஜினியின் 170வது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதில் மஞ்சுவாரியர்,   பகத் பாசில் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு கேரள மாநிலத்தில்  தொடங்குகிறது. இதற்காக ரஜினி இன்று விமானம் மூலம் சென்னையில் இருந்து திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றார்.

விமான நிலையத்தில் நடிகர் ரஜினியை  பத்திரிகையாளர்கள் சந்தித்தனர். அப்போது   ரஜினி கூறியதாவது:  170வது படத்தின் படப்பிடிப்புக்காக செல்கிறேன்.  ஜெயிலர் படம்  எதிர்பார்த்ததை விட   அதிக வெற்றி பெற்றது. 170வது படம் நல்ல கருத்துள்ள , பொழுதுபோக்கு படம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என  கர்நாடகம் கூறுகிறதே  என  ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார். இதைக்கேட்ட ரஜினி பதில் எதுவும் கூறாமல் அங்கிருந்து  கடந்து சென்று விட்டார்.

ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் நடித்த சிவராஜ்குமார் உள்பட கன்னட நடிகர்கள்  அனைவரும் காவிரிக்காக குரல் கொடுக்கும் நிலையில் ரஜினி அதை தவிர்த்து சென்றதை  சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கடுமையாக சாடியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!