Skip to content
Home » 8 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு….கொள்ளையர்கள் கைவரிசை….

8 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு….கொள்ளையர்கள் கைவரிசை….

  • by Senthil

கோவை, எட்டிமடை பகுதியில் உள்ள வணிக வளாகங்களில் மளிகை கடைகள், பேக்கரி,ஸ்டுடியோ,செல்போன் கடை, பேன்சி கடை என 8க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கடையின் உரிமையாளர்கள் நேற்று இரவு பணி முடிந்த பின்பு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து இன்று காலை வழக்கம் போல் அதன் உரிமையாளர்கள் கடையை திறக்க வந்துள்ளனர். அப்போது கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக க.க சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தடயங்களை சேகரித்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சிசிடிவியின்

ரெக்கார்டர்களையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இந்த திருட்டு சம்பவத்தில் 8 கடைகளின் பூட்டை உடைத்து 45ஆயிரம் பணம் மற்றும் உள்ளே இருந்த பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!