தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விடுத்துள்ள அறிக்கையில், இஸ்ரேல்-ஹமாஸ் போரை உலக நாடுகளும், ஐநாவும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். ஆஸ்பத்திரியில் தாக்குதல் நடத்தி பலரை கொன்று குவித்துள்ளதை ஏற்க முடியாது. என்றும் அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று இஸ்ரேல் வந்தடைந்தார். அவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து போர் நிலவரம் குறித்து கேட்டறிந்தார். போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா துணை நிற்கும் என்றும் அவர் கூறினார்.