நெல்லை கல்லிடைக்குறிச்சியில் தந்தை, 5 வயது மகன் ஆகியோர் கொலை வழக்கில் கூலிப்படைக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 15 ஆண்டுகளுக்கு முன்பு பெருமாள் பாண்டியன் என்பவர் கொலை வழக்கில் காளிமுத்து என்பவருக்கு தொடர்பு இருந்துள்ளது. இதற்கு பழிக்குப்பழியாக இன்று காளிமுத்துவை மர்ம கும்பல் கொலை செய்து தலையை நடுரோட்டில் வைத்துச் சென்றுள்ளனர். அதே ஊரைச் சேர்ந்த 7 பேருக்கும் கொலையில் தொடர்புள்ளது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
