திருச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் நாம் தமி்ழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் இன்று புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். புதுக்கோட்டை அடுத்த ஆதனக்கோட்டை பகுதியில் வாக்கு சேகரித்த போது முந்திரி தொழிலாளர்ககளை சந்தித்து பேசினார்.
அப்போது நாம் தமிழர் கட்சி வேட்பாளரான தனக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டாா். அப்போது அந்த தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இன்றி மிகுந்த கஷ்டத்தை அனுபவிப்பதாக கூறினார்கள்.. அவர்களின் துயர் போக்க ஓருங்கிணைந்த முந்திரி தொழிற்சாலை அமைத்து கொடுப்பேன் என வேட்பாளர் உறுதி அளித்தார். பின்னர் தொடர்ந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரித்தார்.