Skip to content
Home » சென்னை மக்களுக்கு உணவு வழங்கிய நடிகர்கள் சூர்யா-கார்த்தி ரசிகர் மன்றங்கள்….

சென்னை மக்களுக்கு உணவு வழங்கிய நடிகர்கள் சூர்யா-கார்த்தி ரசிகர் மன்றங்கள்….

  • by Senthil

மிக்ஜாம் புயலால் சென்னையில் பொதுமக்கள் பெரிதும்  கடுமையாக பாதிக்கபட்டுள்ளனர். இன்னும் ஒரு சில இடங்களில் தண்ணீர் வடியாமல் குளம்போல் காட்சியளிக்கிறது.  மற்ற இடங்களில் மழைநீர் வடிந்துள்ளது.  மாநகராட்சியினர்  மழைநீர் வடிய வழிவகை செய்து வருகின்றனர்.  இந்நிலையில் பொதுமக்கள் குடிநீர், சாப்பாடு. உட்பட அத்தியாவசிய பொருட்கள் கூட இல்லாமல் குழந்தைகளோடு 4 நாட்களாக தவித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் சென்னை மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. நேற்று நடிகர் பார்த்திபன் , அறந்தாங்கி நிஷா, நேரில் சென்று சென்னை மக்களுக்கு உணவு வழங்கினார். மேலும் தமிழக அரசு சார்பிலும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். இருப்பினும் ஒரு சில இடங்களில் குடிநீர் , சாப்பாடு கிடைக்காமல்

மீள முடியாத மிக்ஜம் தாக்கம்!.. உணர்ச்சி பொங்க ஆதங்கத்தை வெளிப்படுத்திய நடிகர் பார்த்திபன்!

உள்ளனர். அவர்களுக்கு இதுபோல் உணவு வழங்க வேண்டும். இந்தநிலையில் சென்னை, திருவொற்றியூரில் உணவு வழங்கும் நடிகர் சூர்யா,  கார்த்தியின் ரசிகர் மன்றங்கள் சார்பில் பொதுமக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். அப்பகுதி மக்கள் மிகவும் நன்றி தெரிவித்து வருகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நன்றி தெரிவித்தது பார்ப்போரை கண் கலங்க வைத்தது. இதேபோல் நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கினால் ஓரளவு பெரும் சிரமத்திலிருந்து வௌியே வருவார்கள் . பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் செய்யுங்கள் என்பது சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!