Skip to content
Home » சென்னை கட்டிட விபத்து…. காயம் அடைந்தவர்களை நலம் விசாரித்த அமைச்சர்கள் ….

சென்னை கட்டிட விபத்து…. காயம் அடைந்தவர்களை நலம் விசாரித்த அமைச்சர்கள் ….

  • by Senthil

பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், பிராட்வே பகுதியில் உள்ள ஆர்மேனியன் தெருவில் கட்டிட விபத்து ஏற்பட்ட இடத்தில் மீட்புப் பணியின்போது காயம் அடைந்து ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இரண்டு நபர்களை  நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு , இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆகியோர் நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்து வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து சிறந்த சிகிச்சை அளித்திட அறிவுறுத்தினர். உடன்,  மேயர்  ஆர். பிரியா அவர்கள், துணை மேயர் மு.மகேஷ் குமார்  உட்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் ஆர்மேனியன் தெருவில் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட இடத்தினை  நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,

இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர்  பி.கே.சேகர் பாபு ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு, அங்கே மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!