Skip to content
Home » சாக்லேட்-சிப்ஸ் கொடுத்த 6 சிறுமிகள் வன்கொடுமை… தலைமை ஆசிரியர் கைது..

சாக்லேட்-சிப்ஸ் கொடுத்த 6 சிறுமிகள் வன்கொடுமை… தலைமை ஆசிரியர் கைது..

ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படித்த 6க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தலைமை ஆசிரியர் ரமேஷ்சந்திர கட்டாரா கைது செய்யப்பட்டார்.  இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு எஸ்பி குந்தன் கவாரியா கூறியதாவது:- குற்றம் சாட்டப்பட்ட தலைமை ஆசிரியர் 8 முதல் 12 வயதுடைய சிறுமிகளை பலிகடா ஆக்கி உள்ளார்.பள்ளி விடுமுறை விட்டு இருந்த போதும் தலைமை ஆசிரியர் கட்டாரா சிறுமிகளை விளையாட அழைத்து செல்வதாக கூறி தனது ஸ்கார்பியோ காரில் வீட்டிற்கு அழைத்து சென்று உள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட தலைமை ஆசிரியர் ரமேஷ்சந்திர கட்டாராவுக்கு 2 வீடுகள் உள்ளன. அவரது குடும்பத்தினர் ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர். மற்றொரு வீடு காலியாக உள்ளது. அங்குதான் சிறுமிகளை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து வந்து உள்ளார்.

பாலியல் வன்கொடுமைக்கு பிறகு, அவர் சிறுமிகளுக்கு சாக்லெட், சிப்ஸ் மற்றும் பிஸ்கட் சாப்பிட பணம் கொடுப்பார். ஒத்துக்கொள்ளாத சிறுமிகளை மிரட்டுவதும் வழக்கம். குற்றம் சாட்டப்பட்ட தலைமை ஆசிரியர் ரமேஷ்சந்திராவின் போனை சோதனை செய்தபோது, அவர் ஆபாசப் படங்கள் பார்ப்பது வழக்கமாக வைத்துள்ளார்.  ஆபாசப் படங்கள் பார்த்த பிறகு சிறுமிகளை அழைத்து வன்கொடுமையில் ஈடுபடுவது வழக்கம். அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியராக மட்டுமல்லாமல், கிராமத்தில் உள்ளவர்களுக்கும் உதவியும் செய்து வந்தார். அதனால் மக்கள் அவரை ஒருபோதும் சந்தேகிக்கவில்லை. இதனை தனக்கு சாதகமாக்கி சிறுமிகளிடம் வன்கொடுமை செய்து வந்து உள்ளார். இதே வழக்கில் இதுவரை 6 சிறுமிகளின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் பல சிறுமிகள் முன்வந்து வாக்குமூலம் அளிக்கலாம் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!