மயிலாடுதுறை அருகே எடுத்துக்கட்டி சாத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் வழக்கறிஞர் சங்கமித்தினர். இவர் நாம் மக்கள் இயக்க தலைவராக இருந்து வருகிறார். கடந்த 2012ஆம் ஆண்டு இவர் மீது கொலை வெறிதாக்குதல் சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் அதிமுக மாவட்ட செயலர் பவுன்ராஜ் உட்பட பலர் மீது இவர் குற்றம்சாட்டினார். இவ்வழக்கு குறித்து போலீசார் முறையாக விசாரணை செய்யாமல் அலைகழிப்பதாக சங்கமித்திரன் எஸ்.பி. அலுவலகம், கலெக்டர் அலுவலகம் என்று பலமுறை மனுகொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பூம்புகார் சட்டமன்ற உறுப்பினராக இரண்டு முறை இருந்தாலும் அதிமுகவை சேர்ந்தவர் என்பதால் வழக்கு கிடப்பில் போடப்பட்டது
தற்பொழுது திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகும் அதே நிலை நீடிப்பதை கண்டித்து, இந்நிலை குறித்து தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் ண மயிலாடுதுறைக்கு வருகை தரும் தமிழக முதல்வருக்கு கருப்பு கோடி காட்டுவது என அறிவித்திருந்தார்.
அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் 4ஆம்தேதி காலையில் அவர் தனது வீட்டில் கருப்புகொடி கட்டியதோடு முதல்வர் வரும் வழியில் கருப்புகொடி காட்டப்போவதாக தெரிவித்ததை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொறையார் போலீசார் ஆய்வாளர் மணிமாறன் மற்றும் போலீசார் வழக்கறிஞர் சங்கம் இதன் வீட்டுக்கு சென்று அவரை கைது செய்து நிலையம் கொண்டு வந்தனர்.
மாலை 5 மணி வரை வைத்திருந்து அதன் பிறகு அவரை விடுதலை செய்தனர்.