Skip to content
Home » திருச்சி வந்தார் முதல்வர் ஸ்டாலின்….. உற்சாக வரவேற்பு

திருச்சி வந்தார் முதல்வர் ஸ்டாலின்….. உற்சாக வரவேற்பு

  • by Senthil

திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் 2 நாள்  பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு  விமானத்தில் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் முதல்வருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வரை பார்த்த தொண்டர்கள் வாழ்த்து முழக்கங்கள் எழுப்பினர்.

அமைச்சர்கள் கே.என். நேரு, மகேஷ், சிவசங்கர், டிஆர்பி ராஜா,ஆ. ராசா எம்.பி. திருச்சி மேயர் அன்பழகன், எம்.எல்.ஏக்கள் பழனியாண்டி,  காடுவெட்டி தியாகராஜன்,  சவுந்திரபாண்டியன்,  ஸ்டாலின் குமார், கலெக்டர்  பிரதீப் குமார்,  திருச்சி ஐஜி கார்த்திகேயன், கமிஷனர் சத்தியபிரியா உள்பட ஏராளமானோர் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

முதல்வருடன் பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோரும் வந்தனர். வரவேற்பு முடிந்ததும் முதல்வர் காரில் சர்க்கியூட் அவுஸ் புறப்பட்டு சென்றார். மாலையில் அவர் ராம்ஜி நகரில் நடைபெறும் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் பங்கேற்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!