Skip to content
Home » சோரன் கைது…. தமிழக முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்

சோரன் கைது…. தமிழக முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்

சுரங்க முறைகேடு வழக்குடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்தனர்.   அவருக்கு நெருக்கடி கொடுத்து  பதவியை ராஜினாமா செய்ய வைத்து கவர்னர் மாளிகை அருகிலேயே முதல்வர் பதவியில் இருந்தவரை  கைது  செய்துள்ளனர்.

ஸ்பெயின் சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,  சோரன் கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சியின் முதல்வரைக்கூட கைது செய்துள்ளனர்.   இது அரசியல் பழிவாங்கும் செயல். இதனை சோரன் துணிச்சலுடன் எதிர்கொண்டதை பாராட்டுகிறேன் என்று அதில் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!