Skip to content
Home » கொரடாச்சேரியில் இன்று மாலை…. முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்

கொரடாச்சேரியில் இன்று மாலை…. முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று  தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.  திருச்சி அடுத்த சிறுகனூரில்  நடந்த  கூட்டத்தில் திருச்சி மதிமுக வேட்பாளர் துரை வைகோ,  பெரம்பலூர் திமுக வேட்பாளர்  அருண் நேரு ஆகியோரை  ஆதரித்து முதல்வர் பேசினார்.  பின்னர் தஞ்சை சென்று தங்கினார். இன்று காலை அவர் தஞ்சையில் திமுக வேட்பாளர் முரசொலியை ஆதரித்து  மாாக்கெட், மற்றும் வீதிகளில் வாக்கு சேகரித்தார்.

மாலையில் தஞ்சை  திமுக வேட்பாளர் முரசொலி, நாகை  இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்  வை செல்வராஜ் ஆகியோரை ஆதரித்து  திருவாரூர் அடுத்த கொரடாச்சேரியில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில்  முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்.  கூட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு பேசுகிறார்கள். கூட்டம் முடிந்ததும் முதல்வர் சென்னை திரும்புகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!