தமிழ்நாடு முதலமைச்சர் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நாளை காலை 11 மணியளவில் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தர உள்ளார். பின்னர் அங்கிருந்து டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள சுற்றுலா மாளிகைக்கு சென்று சிறிது நேர ஓய்வுக்கு பிறகு மாலை 4 மணி அளவில் திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராம்ஜிநகர் பகுதியில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு நடைபெறும் ஒரு நாள் பாசறை பயிற்சி கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அன்று இரவு மீண்டும் சுற்றுலா மாளிகையில் தங்கி மீண்டும் மறுநாள் காலை 27 ஆம் தேதி ராம்ஜிநகர் அருகே உள்ள கேர் கல்லூரியில் வேளாண் சங்கமம் 2023 கண்காட்சியினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். பின்பு சாலை மார்க்கமாக தஞ்சாவூர் செல்லும் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். மீண்டும் இரவு 9 40 மணிக்கு திருச்சி விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.