பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் படித்து வருகின்றனர். இந்நிலையில் , பல வருடங்களாகவே கழிவறைகளை சுத்தம் செய்யாமல் இருந்தாலே மாணவர்கள் சிறுநீரகம் கழிக்க கல்லூரியை விட்டு வெளியே தான் செல்ல வேண்டிய சூழ்நிலை
உருவாகியுள்ளது. இதை பலமுறை கல்லூரி முதல்வர் ரேவதியிடம் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமலும் அலட்சியம் காட்டி வருவதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதனால் பல்வேறு தொற்று நோய்கள் வரும் என மாணவர்கள் அச்சமடைகின்றனர். இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரிடமும் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்பதே மாணவர்களின் வேதனையாக உள்ளது.