திருச்சி மாநகராட்சி ஆணையராக வே.சரவணன் . கடந்த வாரம் பொறுப்பேற்றார். இவர் பதவியேற்ற நாள் முதல் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்து வருகிறார். துப்புரவு பணி, குடிநீரேநற்று நிலையங்கள், குடிநீர் வினியோகம் போன்ற அடிப்படை பணிகளில் கவனம் செலுத்தி முதல்கட்ட பணிகளை அவர் தொடங்கி உள்ளார்.
அந்த வகையில் இன்று காலை கமிஷனர் சரவணன், திருச்சி கம்பரசம்பேட்டையில் உள்ள தலைமை நீரேற்று நிலையத்தை ஆய்வு செய்தார். அங்குள்ள பணியாளர்கள் அனைவரும் வருகை தந்திருக்கிறார்களா என கேட்டறிந்தார். பின்னர் அரியமங்கலம் கோட்டம் மலையப்ப நகரில் உள்ள பிறப்பு இறப்பு பதிவு செய்யும் அலுவலகத்திற்கு திடீரென வந்தாா்.
இந்த பகுதியில் உள்ள துப்புரவு பணியாளர்களின் வருகைப்பதிவேடு இங்கு தான் பராமரிக்கப்பட்டு வருகிறது. இன்று எத்தனை துப்புரவு பணியாளர்கள் பணிக்கு வந்து உள்ளனர். எந்தெந்த பகுதிகளில் அவர்கள் பணிக்கு சென்று உள்ளார்என என கேட்டறிந்தார். வருகைப்பதிவேட்டையும் அவர் பார்வையிட்டார். மாநகராட்சி கமிஷனர் காலை 6 மணிக்கே இந்த அலுவலகம் வந்ததால் அங்கிருந்த ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.