Skip to content
Home » கொடுத்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்… இந்திய கம்யூ., கட்சி..

கொடுத்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்… இந்திய கம்யூ., கட்சி..

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் காவல் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பாபநாசம் ஒன்றிய செயலாளர் பொன். சேகர் தன்னைத் தாக்குதல் நடத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகாரின் மீது எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காமல் மனு ரசீதையும் வழங்காமல் காவல்துறையினர் நடந்து கொண்டதாக உடன் மனு ரசீது வழங்கவும், புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் ஆர். செந்தில்குமார், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சாமு. தர்மராஜன், தங்க. சக்கரவர்த்தி, அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் எம். வெங்கடேசன், திருவையாறு ஒன்றிய செயலாளர் எம். இலங்கேஸ்வரன், ஒன்றிய நிர்வாகி எஸ். புகழேந்தி, என். ரவி உள்ளிட்ட முன்னணி ஊழியர்கள் போலீஸ் ஸ்டேசனில் காத்திருந்து புகார் மனு ரசீது பெற்றுக் கொண்டுள்ளனர். இப்புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!