Skip to content
Home » 28ம் தேதி காங்கிரஸ் கட்சியுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சு

28ம் தேதி காங்கிரஸ் கட்சியுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சு

  • by Senthil

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு  விரைவில்  வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அனைத்து கட்சிகளும் தேர்தல்  ஆயத்த பணிகளை  தொடங்கி விட்டன.  திமுக பொருளாளர் டி ஆர். பாலு தலைமையில் திமுக  கூட்டணி கட்சிகளுடன்  தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழு அமைத்துள்ளது. அந்த குழுவில்  அமைச்சர் நேரு  உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

திமுக கூட்டணியில் உள்ள பிரதான கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் வரும் 28ம் தேதி(ஞாயிறு) திமுக   தொகுதி பங்கீட்டு குழு பேச்சுவார்த்தை நடத்துகிறது.  அண்ணா அறிவாலயத்தில்  பிற்பகல் 3 மணிக்கு இந்த பேச்சுவார்த்தை நடக்கிறது. டி.ஆர் பாலு, நேரு உள்ளிட்டோர் இதில் பங்கேற்கிறார்கள். காங்கிரஸ் தரப்பில் மாநில தலைவர் அழகிரி  மற்றும் மேலிட பார்வையாளர்கள் அசோக் கெலாட்,  முகுல்வாஸ்னிக்,  செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் இதில் பங்கேற்கிறார்கள்.

காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பும் தொகுதிகள் எண்ணிக்கை,  எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது என்ற பட்டியலை அவர்கள் வழங்குவார்கள். அதன் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அனைத்து கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிந்த பிறகு   எந்தெந்த கட்சிக்கு எந்த தொகுதி என்ற பட்டியல் வெளியிடப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!